Wednesday, January 26, 2011

விரைவில் வருகிறேன்....

சில தவிர்க்கமுடியாத வேலை பளுவால் ஒருமாதமாக எதுவுமே எழுதவில்லை,
மன்னிக்கவும், விரைவில் திரும்பவருகிறேன்...

நன்றி

Thursday, December 16, 2010

தாடகைநாச்சியம்மன் மலை

பொள்ளாச்சி,உடுமலை வட்டார மக்களுக்கு பெரும்பாலும் தாடகைநாச்சியம்மன் மலை என்றால் அதன் இருப்பிடம் தெரிந்து இருக்கும். பொள்ளாச்சியில் இருந்து உடுமலை செல்லும் வழியில் நிங்கள் எப்போதாவது பயணித்து இருந்தால், மின்காற்றாலைகளுக்கு அப்பால் உங்கள் கண்ணுக்குகண்டிப்பாக இந்த மேற்குதொடர்ச்சி மலை தெரிந்திருக்கும். கோமங்கலம்புதூர் தாண்டி அடுத்த 12 கிலோமீட்டர் உங்கள் கண்ணில் இந்த மலையின் அழகு உங்கள் பயணத்தை களைப்பு இல்லாததாக்கி இருக்கும். இந்த மலைகளின் அழகையும், மேகங்கள் முட்டி செல்லும் அற்புத காட்சியை பார்க்கலாம். ஒவ்வொரு நாளும் இந்த மலையின் அழகு ஒவ்வொரு விதமாக இருக்கும். இளம் காலை வேலையில் சுரியகதிர் பட்டு தங்கமாக இருக்கும், மாலை வேலையில் செங்கதிர் விண்ணில், ஏறவில் நிலவொளியில், மழை காலத்தில் மேகங்கள் சூழ்ந்தும் அழகாக இருக்கும். பள்ளியில் படிக்கும் காலங்களில் ஒருநாள் இந்த மலையின் உச்சியில் எறிவிடவேண்டும் என்ற எண்ணம் உருவானது. என் தந்தை வனத்துறையில் பணியாற்றியதால் சிறிது காலம், நிலகிரிமலையில் ஊட்டி, கூடலூர், முதுமலையில் யானை கேம்ப் அருகிலும், மேற்குதொடர்ச்சி மலையில் அட்டகட்டி, டாப்ஸ்லிப், மற்றும் சத்தியமங்கலம் மலை பகுதிகளில் என்னுடைய முதல் 12  வருடங்கள் கழிந்தன, பின் உடுமலையில் தாத்தா பாட்டி, சொந்தங்கள் அருகில் வாழ தொடங்கினோம். இன்னும் பெற்றோர் அங்குதான் வாழ்கின்றன.நான் சொல்லும் தாடகைநாச்சியம்மன் மலை ஆழியார் அணைகட்டுக்கும் திருமூர்த்தி அணைகட்டுக்கும் இடையில் உள்ள மலை. இதன் உச்சியில் இருந்து பார்த்தல் இரு அணைகளும், அதனை இணைக்கும் கான்டூர் வாய்க்காலும் மிக அழகாக இருக்கும்.

உடுமலையில் இருந்து 5 ம் நம்பர் பஸ் ஏறி, 12 கிலோமீட்டர் தாண்டி ரெட்டியாரூர் பள்ளி பஸ் இறக்கத்தில் இறங்கி  2 கிலோமீட்டர் தெற்கே நடந்தால் அல்லது பொள்ளாச்சியில் இருந்து வரும் 27ம நம்பர் பஸ் மாறி போனால் வருவது அர்த்தநாரிபாளையம். என் கல்லூரி நண்பன் சதீஷின் அழகிய பசுமையான, தென்னதோப்புகள் நிறைந்த கிராமம். கல்லூரி நாட்களில் என்வீட்டில் நான் தங்கிய நாட்களை விட சதீஷின் அம்மா கையால் நெறிய சாப்பிட்டு இருக்கேன். இன்னும் இவர்கள் தோட்டத்து கொள்ளு, இங்கு அமெரிக்காவில் எங்கள் சமையல் அறையில்.  சதீஷின் சில விவசாய நிலங்கள் இந்த மலைத்தொடரின் அடிவாரத்தில் இருக்கிறது. மேலும் கோபாலசுவாமி மலைக்கோவில் இவன் ஊரில் இருந்து சிறுதூரம் தான்.. ஒருமுறை அர்த்தநாரிபாளையம் அம்மன் கோவில் திருவிழாவின் போது ஒரு கோஷ்டி தாடகைநாச்சியம்மன் மலைக்கு சென்று தீர்த்தம் எடுத்து வருவதாக அதிகாலையில் புறப்பட்டது, நாங்களும் நண்பர்களுடன் ஆறு மணிநேரம் மலை ஏறி இதன் உச்சிக்கு சென்று மறுபடியும் ஆறு மணிநேரம் கீழே இறங்கி வந்தோம். சில இடங்களில் தவறி விழுந்தால் எலும்பு கூட கிடைக்காத அளவிற்கு பள்ளம். மைனா படத்தில் வரும் இயற்கை கட்சிகளை மிஞ்சும் அளவிற்கு அழகிய மலை. அடுத்தமுறை நண்பர்கள் மட்டும் வந்து 2-3  நாட்கள் தங்கி செல்வது என திட்டமிட்டோம். அடுத்த செமஸ்டர் விடுமுறையில் மூன்றுநாட்கள் தங்குவது என்று முடிவெடுத்து எல்லோர் வீட்டிலும் சொல்லிவிட்டு கிளம்பினோம்.

எங்கப்பா சொன்னாரு, பாரஸ்ட்காரங்க சந்தனகட்டை கடத்தறவனுகளை பிடிக்க அந்தபக்கம் வருவாங்க, அதேமாதிரி கட்டை கடத்தரவனும் இருப்பான், உங்களை  பாரஸ்ட்காரங்க சந்தனகட்டை கடத்தரவுனுகளாவும், கட்டை கடத்தரவனுக உங்களை பாரஸ்ட்காரங்களாவும் நினைச்சி பிரச்சனையிலே மாட்டிக்காமே "மொத்ததுலே ஜாலியவும் இரு அன்ன சாக்கிரதையாவும் இருன்னு" சொன்னாரு.

நண்பர்கள் மாரி, அன்பு, முருகவேல், சதீஷ், குட்டி சதீஷ், நான், மற்றும் உள்ளூர் நண்பர்கள் என 10 பேர் கிளம்பிவிட்டோம். தேவையான பொருட்களை நாடார் கடையில் வாங்கி கொள்ள ஒரு பட்டியல் போட்டோம். ரவை, அரிசி, பருப்பு, மிளகாய், வெங்காயம், சர்க்கரை, டீ, உப்பு, எண்ணை, என தேவையான உணவு பொருட்களையும், தங்குவதற்கும் சமைப்பதற்கு, கூடாரம் அமைக்க பொருட்கள் என தயார் செய்தோம். உரபைகளை ஒன்றாக இணைத்து பெரிய விரிப்பாக கிராமத்தில் செய்து இருப்பார்கள், இதனை  கூடாரம் போடா எடுத்துகொண்டோம். ஆளுக்கு ஒரு போர்வை, அரிவாள், டார்ச் லைட், தண்ணீர் பாட்டில். இவை அனைத்தையும் சம அளவில், சம எடை  இருக்குமாறுபிரித்து அவரவர் போர்வையை விரித்து அதன் மத்தியில் வைத்து போர்வையை சுற்றி பின் கயிற்றால் இறுக்கி மூட்டை மாதிரி செய்து அதனை முதுகில் கட்டிகொள்வோம். இப்படி செய்வதை வள்ளி கட்டுதல் எனறு சொல்லுவார்கள். இப்போ எல்லாம் backpacking  நு இதே சொல்லறாங்க. இப்படி எல்லாவற்றையும் முதுகில் ஏற்றி மாலை ஆறு மணிவாக்கில் அடிவாரத்தை நோக்கி நடையை போட்டோம், எங்க கூடவே  2  கோழிகளும் பயணத்தை தொடங்கின, அவைகளுக்கு தெரியவில்லை இன்னும் ஒருநாளில் எங்களுக்கு உணவாகபோகிறது என்று.  ஊரு பெருசுக எல்லாம் பாத்து போங்கப்பானு அறிவுரை. இரவில் மாலை ஏறுவதற்கு காரணம் நிலவொளி, மற்றும் வெய்யில அவ்வளவாக இருக்காது. மேலும் நிறையபேர் அடிகடி சென்று வருவதால் ஒத்தையடி பாதை உருவாகி இருந்தது. நண்பர்களை கிண்டல் அடித்துக்கொண்டும், ஊர் பழமை பேசியபடியும் களைப்பு தெரியாமல் மாலை ஏறுவோம். இப்படி வளைந்து வளைந்து மேலே செல்லும் பாதை ஒரு கட்டத்திற்கு மேலே கிடையாது, ஒரு அனுமானத்தில் மாலை ஏறவேண்டும். நடுவில் ஒரு ஊற்று இருக்கிறது, அங்கு தண்ணீர் நிரப்பிக்கொண்டு சிறிது களைப்பாறி செல்வோம். இந்த இடம் வந்த பிறகுதான் உண்மையான மலையேற்றம் ஆரம்பம்.

இரண்டு அடி அகலத்தில் பக்கவாட்டில் பள்ளத்தாக்கு ஒட்டி ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி இரநூறு அடி நடக்க வேண்டும், பிறகு வலுக்குபாரை என்ற இடம் வரும், இதற்கு மேல் பாறையில் ஊர்ந்து சென்று பிறகு அடர்ந்த காட்டுபகுதியை கடக்கவேண்டும். இந்த அடர்ந்த காட்டில் பகலில் கூட வெய்யில உள்ளே நுழையாது. மூங்கில் காடுகளும், தேக்கு மற்றும் இலவங்க மரமும் நிறைய இருக்கும். இதனை கடந்து இரண்டு மணிநேரம் நடந்தால் கோவில் வரும், கோவில் அருகில் செல்லும் போதே இலவங்க மரத்தின் வாசம் விசும். அப்போதே நாங்கள் உற்சாகமாகி, வழியில் கிடைக்கும் காய்ந்த மரங்களை சேகரிக்க அரம்பிதுவிடுவோம். கோவில் அருகில் ஒரு ஊற்று, வட்டப்பாறை, அதில் ஆட்டுக்கல் செதுக்கி வைத்து இருப்பார்கள், 2-3 கற்களால் கூட்டப்பட்ட அடுப்பு இருக்கும். வட்டபரையில் கூடாரம் அமைத்து தங்குவோம். சென்றவுடன் எல்லோரும் வேலைகளை பிரித்துகொண்டு செயல்பட ஆரம்பிப்போம்.
மரகிளைகளை வெட்டி கூடாரம் அமைக்க கிளைகளை எடுத்து வருதல், இரவு குளிருக்கும், காட்டு விலங்குகள் வராமல் இருக்க நெருப்பு போடா கட்டைகளை சேர்ப்பது, கொண்டுவந்த பொருட்களை பத்திரபடுதுவது, காலை உணவு  உப்புமா செய்வது, இளவஞ்கபட்டைகளை உரித்து டீ வைப்பது என எல்லோரும் வேலையில் மும்மரமாக இருப்போம். எல்லாம் அமைந்தபிறகு, காலை உணவு சாப்பிட்டுவிட்டு, மலையின் அழகை காண சிலரும், அசதியைபோக்க குட்டி தூக்கமும், சிலர் ரம்மி ஆடுவதுமாகபொழுது போக்குவோம். 

மதியம் அரிசி, பருப்பு, தேங்காய், சேர்த்து கொங்கு வாட்டரதிற்கே உரிய அரிசிபருப்பு சாதம் ரெடியாகும், அதை மங்கா ஊறுகாயுடன் சாப்பிடுவது அமிர்தம். இரவுக்கு கொண்டு சென்ற கோழிகளை ஒன்றை சாமிக்கு பலியிட்டு, தேங்காய் அரைத்து கொழம்பு வைத்து சாப்பிடுவோம்.  அந்த மனம், ருசி இன்னும் எவ்வளவோ இடத்தில சாப்பிடும் இன்னும் கிடைக்காமல் தேடிக்கொண்டு இருக்கிறேன். நாடு ராத்திரி எழுந்து மிச்சம் இருந்த கொழம்பு சாதத்துடன் சபித்து இன்னும் நினைவுக்கு இருக்கிறது.நிலவொளியிலும், நெருப்பு வெளிச்சத்தில் ரம்மி ஆடுவதும் வெளி உலக தொடர்பே இல்லாமலும் அருமையாக பொழுது போகும். நண்பர்களிடம் நெருக்கம் இன்னும் இறுகும்.
கொண்டு சென்ற கோழி, அரிசி எல்லாம் தீர்ந்தபின் கீழே இறங்கி வருவோம். கிராமத்துக்கு வந்து பாப்புசெட்ல் ஒருமணி நேரம் குளிச்சதுகு அப்புறோம் தான் என்கமேல இருக்கற மலைவாசம் போகும். இதுமாதிரி சிறிய, பெரிய கூட்டத்துடன் 7-8  முறை சென்று இருக்கிறோம். இதுதவிர, பரம்பிக்குளம், சோலையாறு, பச்சைமலை, டாப்ஸ்லிப், வெள்ளிங்கிரிமலை, மருதமலை மேலே, என நான் ஏறத மலைகளில் இல்லை. அப்போ அப்போ யானை பார்த்து ஓடிவந்த சம்பவமும், பச்சைமலையில் புலியை பார்த்து நண்பன் பத்துநாள் காச்சலில் படுத்த கதைகளை அடுத்து அடுத்து மொக்கை போடறேன்.  

அடுத்த முறை இந்திய செல்லும்போது இப்படி மாலை ஏறவேண்டும் என்று நினைப்பேன், ஆனால்என்னுடைய liabilities(அதாங்க வீட்டம்மா, புள்ளைங்க குட்டிக) அனுமதிப்பது இல்லை. பார்போம் அடுத்து என்பயனுடன் இங்கு கேம்பிங் சென்று ஆசையை பூர்ததிசெயயவேண்டியதுதான்...

படம் google map இல் இருந்து. நன்றி google.

Tuesday, December 14, 2010

தேனூர் சிவாஜி....

எனக்கு இந்த மனசு வரும்னு தெரியலே...  ஆனா செந்தில் தொடக்கி நல்லபடியாக வளர்ந்துவரும் பயிர் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.

என்னால் ஆனா  உதவி அனுப்பி உள்ளேன், உங்களால் முடிந்தால் உதவவும். 

குமுதம் வெளியிட்ட செந்திலை பற்றிய கதை...

Vijay டிவி இல் செந்தில் பற்றிய நிகழ்ச்சியை பாருங்கள்,  அமெரிக்காவில் ஆணி அடிக்கும் நம்மில் எத்தனை பேருக்கு இந்த மனம் வரும்.  

வாழ்க செந்தில். ...

Monday, December 13, 2010

தேள்கடி

இங்கே நான் பேசபோகும் தேள்கடி, வாரமலர் துணுக்கு பகுதிலே வருகிற தேள்கடி அம்மா பற்றி இல்லை. (இது 1990 களில் வாரமலர் படித்தவர்களுக்கு தெரியும், சரி சுச்பென்ஸ் வேண்டாம் -நான்  டிஸ்கோ சாந்தி பத்தி பேசலே). இது நிஜமா நானும் என்னோட நண்பன் கட்டை மாப்பிளையும் வாங்கின தேள்கடி
பத்தி பேசபோறேன்.  பாரதியார் பல்கலையில் கல்வி கத்துகிட்டு இருந்தோம் அப்போ,  1997-98 நு வச்சுகொங்கோ, நாங்க தங்கி இருந்த விடுதியை சுத்தி புதர்கள், கடு தான், மருதமலை அடிவாரம், அப்போ அப்போ தண்ணிய தேடி யானைகள் தொண்டாமுத்தூர் வரத்தும் உண்டு. மழை காலங்களில் நெறிய பாம்பு, தேளு எல்லாம் வரது உண்டு. அதிலே சில வணங்காமுடிங்க தவளைய பிடிக்க வர சரைபாம்ப அடிச்சு ரோட்டுலே போட்டு பயத்தகூட்டுவணுக. எல்லாம் ஊட்டிலே இருந்து வந்த நம்ப மலைமக்கள் தான். கோவைக்கும் இவங்களுக்கும் நல்ல தொடர்பு, நல்ல டீ இலை வெலைக்குபோச்சுன்ன கார் எடுத்துட்டு சேரன் டவேர்ச்கு முடிவெட்ட வருவானுக.
எங்க தோழன் ஒருத்தன் பொறந்த நாள் அன்னைக்கு கொஞ்சமா சரக்கு அடிச்சுட்டு, ஹாஸ்டல் மெஸ் லே சாப்ட்டுட்டு பசங்க வெளிய வந்து, வரண்டாலே நின்னுகிட்டு பொகைபோட தயார் ஆனாங்க நம்ப பசங்க. 
நான், பிளாஸ்மா ராம்ஸ், செட்டி சரவணன், கட்டை மாப்பிள்ளை, வாத்தியார் ரமேஸ், பாலிடிக்ஸ் செங்கிஸ், சாமி, RTR, சண்முகம், எல்லோரும் நின்னுகிட்டு இருந்தோம். திடிர்னு என்னோட கால்லே எதோ
நெருப்பு கங்கு பட்ட மாதிரி சுட்டுச்சு, கலை உதறிட்டு பார்த்தா காலுக்கு கீழ ஒரு கருந்தேள் கெடந்துச்சு, குச்சி எடுத்து தள்ளி பார்த்தா செத்து கெடந்துச்சு. என்னை தேள் கடிச்சுடுசுனு, பசங்களுக்கு ஒரே சந்தோசம், ஆபத்பாந்தவன் அசோக் பைக்லே ஏத்திகிட்டு கல்வீரம்பட்டிலே இருக்கிற மந்திகிரவங்ககிட்டே கூட்டிடுபோயி மந்திரிச்சு ரூம்க்கு வந்து தூங்கிட்டேன். கட்டை மாப்பிள்ளை அடுத்த இரண்டு வாரத்துக்கு" டேய், நி எல்லாம் ஒரு ஆளாடா? தேளு உன்னை கடிச்சு செத்து போயிடுச்சு, பார்த்துடா, யாரையும் கொட்டிடதேனு ஒட்டிகிட்டே இருப்பான். 

இது நடந்து ரெண்டு மூணு வரம் கழிச்சு, எப்போவும் போல ராத்திரி போடறே ஊத்தாப்பம் சாப்ட்டுட்டு, வேலிய தாண்டி, ஆலமர பஸ் ஸ்டாப் லே இருக்ற தாத்தா கடைக்கு கல்லைமுட்டாய், வாழைபழம் சாப்பிட்ட பிளாஸ்மா ராமசாமியை சரிபண்ணி, நான், கட்டை மாப்பிளை, வாத்தியார் ரமேஷ், எல்லோரும் போனோம், திரும்பி வரும் போது
நம்ப கட்டை மாப்பிளை கால ஒரு கருந்தேள் கொட்டிடுச்சு, மறுபடியும், ஆபத்பண்டவன் அசோக் அவனே கூட்டிகிட்டு கல்வீரம்பளையம் போயி மந்திரிசுகிட்டு வந்து தூங்கிட்டான். அடுத்தநாள் கலையிலே பார்த்தா நம்ப கட்டை மாப்பிள்ளை காலு பூரி மாதிரி வீங்கி இருந்துச்சு, உடனே R.S.  புரத்திலே இருக்கிற நல்ல ஆசுபதிரிக்கி கூடிட்டுபோனோம், ஒரு மூணு நாள் வச்சு வைத்தியம் பார்த்து அவனே வீட்டுக்கு அனுப்பினாங்க, இப்போவும் நம்ப கட்டை மாப்பிள்ளை சொல்லுவான்,
ஏண்டா உன்னை கடிச்ச தேளு செத்துப்போச்சு, நீ எல்லாம் "ஒரு ஆளாடா?

ஹஹஹஹஹா, நம்ப கட்டை மாப்பிள்ளை இப்போ கொரியாலே பிசிக்ஸ் சொல்லிகொடுதுட்டு இருக்கான்.

எளிமையாய்


பின்லாந்தில் இருக்கும் Rovio என்ற கம்ப்யூட்டர் விளையாட்டு தயாரிப்பு நிறுவனம் 2009  இல் "கோவகார பறவைகள்" - "Angry Birds"வெளிட்டது, தற்போது 10 மில்லியன் தடவை தரவிகக்கம் செய்யப்பட்டு இருக்கிறது, ஐ-போன், ஐ-பேடு, போன்றவற்றல. இது தவிர மற்ற இயக்கமுறைகளில் (கம்ப்யூட்டர் மற்றும் விளையாட்டு சாதனங்கள்) 50 மில்லியன் தரவியக்கம் செய்யப்பட்டு, பைத்தியகரதனமாக எல்லோரும் விளையாடுகின்றனர். இந்த பைத்தியம் இந்த வார இறுதியில் எனக்கும் 
தொற்றிகொண்டது. மிகவும் எளிய விளையாட்டு, நமக்கு நாமே சவால் விட்டுக்கொண்டு அதிக புள்ளிகளை பெறுவதும் அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவதும் தான் இலக்கு, கூடவே நிறைய விளையாண்டு வீட்டம்மா கிட்டே திட்டும் வாங்கிக்கொண்டு இருக்கிறேன். 

வெவ்வேறு கட்டமைப்புக்குள் ஒளிந்திருக்கும் பன்றிகளை கோவம் கொண்ட பறவைகளை உண்டிவில் உதவியுடன், சரியான கோணத்தில் செலுத்து கட்டமைப்பை தகர்த்து உள்ளே இருக்கும் பன்றிகளை குறைந்த பறவைகளை கொண்டு கொல்லவேண்டும். எல்லா ஒளிந்திருக்கும் பன்றிகளையும் கொன்றபிறகு அடுத்த கட்டத்துக்கு பதவிஉயர்வு. உபயோகபடுதாமல் இருக்கும் பறவைகளுக்கும், உடைத்த கட்டபைபிற்கும் ஏத்தமாதிரி புள்ளிகள் வழக்கபடும். ஒவ்வொரு கட்டத்திலும் சிறிது பெரியதுமானபன்றிகள் மரம, கண்ணாடி, இரும்பு, கன்கிரிடு, போன்றவற்றை பயன்படுத்து கட்டப்பட்டு இருக்கும் கட்டமைப்புகளும் மாறுபடும்.
அதேபோல, ஒவ்வொரு கட்டத்திலும் வேறு வேறு பறவைகள் நமக்கு கொடுக்கப்படும், சரியான கோணத்தில் பறவைகளை உண்டிவில் உதவியில் செலுத்து பன்றிகளை கொன்று அடுத்த கட்டத்துக்கு முன்னேறி போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான். 

இஸ்ரேல் நாட்டு தொலைகாட்சி பன்றி மற்றும் இந்த பறவைகளை உருவகபடுத்தி, ஒரு நையாண்டி நிகழ்ச்சி வெளியிட்டு நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு "Peace Treaty Sketch"  என்று நாமகரணம் சூட்டி இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன் கும் நடந்த அமைதி பேச்சுவார்த்தைகளை நையாண்டி செய்தது இந்த நிகழ்ச்சி.

இவ்வளவு வருமானம், பிரபலம், மில்லியன் கணக்கானவர்கள் பின்பற்றுவதற்கு கரணம் "எளிமை".  என்னடா இவன் எளிமையை பற்றி மொக்கை போடனன்னு நிங்கள் நினைபதற்கு ஒருகாரணம் நேற்று நடந்தது.
அலைபேசியில்,பழமைபேசி மற்றும் நசெரயனுடன் பேசும் சந்தர்பம் கிடைத்தது. நசரேயன் அவர்களின் அறிவுரை, "எளிமையான கருத்துகளையும் எழுத்துகளையும் படிபதற்கே நிறையபேர் ப்ளாக் படிக்க வருகிறார்கள், அப்படி எழுதுவதே நிறைய மொய் கிடைக்கும் என்றார். இந்த கோவகார பறவைகளின் வெற்றியை பார்க்கும போது, அது எவள்ளவு உண்மை என்று தெரியும்.

சரி அடுத்த 2 மணிநேரம் பறவைகளை ஏவி பன்றிகளை கொன்று, வீட்டம்மா கிட்டே ஏச்சு வாங்க போறேன்... அப்போறோம் பார்போம்.




Thursday, December 9, 2010

விருவிரு மாண்டி விருமாண்டி..

ஜப்பானில் இப்போதும் கிரிக்கெட் நல்ல பிரபலம், இந்திய, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, இங்கிலாந்து, மற்றும் ஜப்பானியர்கள் தங்களுகென்று ஒரு டீம் உருவாக்கி டோக்கியோ கிரிக்கெட் league ஏற்படுத்தி விளயண்டுவருகின்றன.
கிரிக்கெட்ட விட நம்ப தலைவர் ரஜினிய தெரிஞ்ச ஜப்பான்காரன்  அதிகம், அடுத்தது மீனா.   நான் இந்தியன் engineers cricket club லே சேர்ந்து விளையாடிகிட்டு இருந்தேன். துவக்க பந்துவிசுவேன், அப்போறோம் கடைசிய போயி கட்டு சுத்து சுத்தி பந்தா மட்டயிலே பட்டு போச்சுன ரன் எடுப்பேன். அப்போ அப்போ மட்டையிலே நல்ல எடத்துலேஅதுவா பட்டு 4, 6 போகறது உண்டு. நம்ப பெருமைய இந்த லின்க்ல போயி பாருங்கோ( அப்போ நடோடியோட பேரு ஜெயகுமார்)


டோக்யோலே இடப்ற்றகுறை பற்றி எல்லோருக்கும் தெரியும், இதுலே கிரிக்கெட் மேட்ச் விளையடனும் என்றால் இரண்டு ட்ரெயின் இரண்டு பஸ் மாறி போகணும், பிரிட்டிஷ் எம்பசி கிளப்லே அருமையான கிரிக்கெட் கிரௌண்ட் இருக்கு, என்ன ஒரே பிரச்னை, 80 யார்ட்ஸ் தண்டி 50 அடி தடுப்பு ஸ்க்ரீன் தண்டி 6  அடிச்சா மட்டைஆடிபவர் அவுட். நல்ல கவனிக்கவும் மட்டை அடிக்கறது, மட்டை ஆகறது இல்லை.  நம்ப யூசுப் பதான் எல்லாம் ஒரே பால், அவுட் ஆகிடலாம். டிராவிட் மாதிரி ஆளுக அவுட் ஆகம ரொம்பநேரம் விளையாடலாம். சரி மொக்கை போதும் விஷயத்துக்கு வரேன்.

மட்டை, குச்சி, பந்து, கால்க்காப்பு, கைகாப்பு, இன்னும் வேறே சில காப்புகளை எடுத்துட்டு, மூணு ட்ரெயின் ஏறி, அப்றோம் ஒரு பஸ் மாறி,  கிரௌண்டுகு போயி, டாஸ் தோத்து,  எதிரணி பாகிஸ்தான் பயலுவ எங்களை  மொதல்ல மட்டை அடிக்க சொன்னணுக.

ஒருநிமிஷம், இந்த பாகிஸ்தான் காரங்களை பத்தி ரெண்டு வரி சொல்லிக்கறேன். ஜப்பானுக்கு எப்படியோ பிசினஸ் விசாவுளே வந்து இங்கேயே டயர போட்டு உக்காந்து ஜப்பன்காரன்களை ஆட்டய போட்டுட்டு இருக்கானுக . அப்போறோம் ஒரு ஜப்பான் குட்டிக்கு துண்டபோட்டு
லீகல் ஆகிடராணுக. இந்த ஜப்பான் குட்டிக பர்தா போட்டுட்டு அவனுக பின்னாடி அலையுதுக. எல்லாம் காலகொடுமை சார். அப்படி என்ன தொழில் பண்ணரனுகனா, எடுபிடி, அகிஹாபார என்கிற ஏலேக்ட்ரோநிக்ஸ் சந்தகடையிலே எடுபிடி, டாக்ஸி ஓட்டறது, பழைய கார் வாங்கி துபாய் அரபுகளுக்கு விக்கறது, இப்படித்தான்.

சரி, மேட்டருக்கு வரேன், அடிச்சு பிடிச்சு 35 ஓவர்லே 180 சொச்சம் ரன் எடுத்து, மத்தியானம் பிச்சா உண்ணு போட்டு, தடுபட்டம் ஆட போனோம். விதி அங்கேதான் எனக்கு விளையாடியது.  நானும் என்னோட ஒபெனிங் பௌலிங் சகலையும் எங்களோட 5 ஓவர் ஸ்பெல் முடிச்சவோடனே, ஒரு மொக்கை ஸ்பின் பௌலர் வந்தாரு, நம்ப தலைவரு ஸ்பின் போடபோறேன்னு லட்டு மாதிரி தூக்கி  தூக்கி போடுவாரு, அப்போ அப்போ எதாவது இளிச்சவாயன் அவுட் ஆவான், நம்ப பாகிஸ்தான் காட்டனுகளுக்கு ஸ்பின் வந்தாலே குஷி ஆகிடுவணுக, அடி பின்னிடுவணுக. சாம்பார, இட்லி, தயிர்சாதம் உங்கரே நாம, எல்லாம் அவனுக மாட்டுக்கறி திங்கறது  தான்   காரணம்னு மனச தேத்திகுவோம்.
நம்ப ஸ்பின் தலைவர் கும்ப்ளே மாதிரி கைய அப்படி இப்படிஆட்டி   பீல்டிங் செட் பண்ணினாரு, என்ன கூப்டு, நாடோடி, நீ நல்ல விழுந்து கிளுந்து பந்த புடிப்பே, அதேமாதிரி காட்ச் வந்தாலும் விடமாட்டே, அதுனால லெக் அம்பயர் கிட்டேபோயி நில்லுனாறு, அங்கே ஸ்வீப் ஆடி மிஸ் ஆன  காட்ச் வரும், சரி, ஈசியான இடம்னு போயி  நின்னேன். படுபாவி, மொத பந்தே
புல்டாஸ் போட்டான், நம்ப பாகிஸ்தான் காட்டான் ஓங்கி அடிச்சான், அது கேட்சா, தரையோட ஒட்டி வந்துசு, நம்ப மனசுலத்தான் யுவராஜ், ஜான்டி ரோட்ஸ்அப்படின்னு எல்லோரும் ஏத்தி விட்டதுலே, ஒரு டைவ் அடிச்சு காட்ச்  புடிக்க போனேன், பந்து கையிலே இருந்து எகிறி விழுந்துடுச்சு, கையிலே ஒரே வலி, எழுந்து பார்த்தா, இடது கை எல்லாம் ஒரே நத்தம், நன் போட்டு இருக்கற வெள்ளை சொக்க எல்லாம் சிகப்பு ஆகிடுச்சு.
என்னன்னுதான் பார்த்தா, ஆள்காட்டி விரலுக்கும் பெருவிரலுக்கும் நடுவுலே இருக்கிற இடம் கிழிஞ்சு நத்தம் ஒழுகுது. எதிரணி லே பெஞ்சு தொடைக்கறவன் ஒருத்தன என்கூட கூப்பிட்டுகிட்டு, பக்கத்துலே இருந்த அவசர சிகிச்சை ஆசுபத்திரிக்கு போனோம். மறுபடியும், இந்த பாகிஸ்தான் காட்டணுக எப்படித்தான் ஜப்பான் மொழி சிக்கிரம் காத்துக்கான்னு தெரியலே,  அதே மாதிரி ஜப்பான் குட்டிகளுக்கு துண்டுபோட்டு பர்தா போடவைக்கரதிலையும் கில்லாடிக.


ஆசுபத்திரி வாசலிலே ஜப்பான் பெருசு ஒண்ணு வீல்சேரில் உக்காந்துட்டு புகைபோட்டுகிட்டு இருந்தாரு, எங்களை பார்த்தும் அந்த பெருசு,

என்ன ஆச்சு"

கிரிக்கேட்லே பந்துபிடிகும்போது அடி பட்டிடுச்சு...

கிரிக்கெட்ணா  என்ன?

உங்க ஊரு பேஸ்பால் மாதிரி, ஆனா, வெறும் கையிலே பந்து பிடிக்கணும், கைகாப்பு போட்டு ஏமாத்தகூடாது...

அப்போ பந்து மெத்துன்னு இருக்குமா?

இல்லை பேஸ்பால் மாதிரி அதே சைசுலே அதைவிட கெட்டியா இருக்கும்.

அப்ப்றோம் ஏன் கைகாப்பு இல்லாம பிடிக்கற?

ஐயா, வலிக்குது போதும் அழுதுடுவேன்...

சரி சரி கவலை படாதே, எனக்கு இரண்டாம் உலகப்போரில் ரெண்டு குண்டு என்முதுகுலே பாஞ்சுது, அதுலே ஒண்ணே எடுத்துட்டணுக, இன்னும் ஒண்ணு உள்ளேதான் இருக்கு, இது எல்லாம் ஜுஜுபி

அய்யா உங்க வயசு என்ன

இம்ம் 86  இருக்கும்


அய்யா சாமி உங்க வீரத்துக்கு ஒரு வீரவணக்கம், நான்  போயிட்டுவரேன், வலிக்குது.... , நாங்க எல்லாம் கைப்புள்ள ரேஞ்சு அப்படினு சொல்லிடு எடத்த காலி பண்ணிட்டு உள்ளே போயிட்டோம்

இரண்டாம் உலகப்போருக்கு அப்புறம் ஜப்பன்காரன்களோட ஆக்ரோஷம் ரொம்பவேகொறஞ்சு போச்சு... அதே மாதிரி சுபாஷ் சந்திரபோஸ் மேலே அவங்களுக்கு நிறைய மதிப்பும் மரியாதையும் இருக்கு, இதை எல்லா இந்தியன் மேலயும் காட்டுறாங்க...

இன்னொன்னும் சொல்லுவாங்க 'அத்தமகே ஈ தேசுன!! அப்படினா நீங்க

எல்லாம் மண்டகாரனுகனு அர்த்தம. .

அதுக்கு அப்றோம் கையே சுத்தம் பண்ணி, 14 தையல் போட்டு அனுப்பிடணுக,  ரெண்டு வாரம் கட்டோட லொள்ள பண்ணாம இருந்தேன்...

Wednesday, December 8, 2010

ஜப்பானில் பல்பு


நாம்ப ஜப்பான் போன புதுசு, எதோ நமக்கு தெரிஞ்ச இங்கிலிபீசு, ஒன்னு இரண்டு ஜப்பான் வார்த்தைகளை வச்சுக்கிட்டு வாழ்க்கையே ஓட்டிகிட்டு இருந்தேன். நமக்கு தெரிஞ்ச சைகை மொழி அப்போ அப்போ கை கொடுத்துச்சு. ரயில்பயணகளில் பழகிய ஆணி அடிபவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள்  நட்புடன்  சந்தோசமாக ஈ ஓட்டிக்கிட்டு இருந்தேன். அப்படி ஒருநாள் மும்மரம ஈ அடிசுகிட்டு இருக்கையிலே, தொலைபேசி அடிச்சது, நாடோடி சான், உன்னக்கு போன் அப்படின்னு கூட ஈ அடிக்கற ஜப்பான்காரன் கூப்பிட்டான், எடுத்த காதில் தேன்.. கொங்கு தமிழில் எனக்கு தெரிந்த பாரதியார் பல்கலைகழக பேராசிரியர், இங்கே மூன்றுமாத ஆராய்சிக்கு வந்து இருப்பதாகவும், இரவு உணவுக்கு சந்திக்க முடியுமா என்று கேட்டார். உடனே சரின்னு சொல்லிட்டேன், ஓசி சாப்பாடு வாத்தியார் வாங்கிதறாரு வேண்டாம்னு சொன்ன அவரு கஷ்டபடுவரு.  அவரோட முகவரி வாங்கிட்டு, என்னோட GPS (அதுதங்கே,சிலந்திவலை மாதிரி இருக்கும்  டோக்யோ subway map),  இது இல்லேன்னா நான் அவ்வளவுதான். Shinjuku போறதுக்கு பதிலா Kichijoji போயிடுவேன். நம்ப எல்லாம் சிறுவாணி, திருமூர்த்திமலை தண்ணி குடிச்சு வளந்த தையிரியம் தான்.

ரயில் நிலையம் வந்து, வெளியே வந்து வாத்தியாருக்கு காத்துக்கிட்டுஇருந்தேன். நம்ப இந்தியன் வந்தியர் சொன்ன நேரத்துக்கு வரணும்னு சட்டமா என்ன? அவரு இன்னும் வரலே. நானும் சும்மா இருக்காமே, மேலயும் கீழையும் நடை போட்டுக்கிட்டு இருந்தேன். அப்போ அப்போ வர போற ஜப்பான் குட்டிகளை துண்டு போட்டுக்கிட்டு இருந்தேன். அவிங்கே யாரும் என்ன ஒரு பொருட்டகூட பக்கலேங்கறது அடுத்த விஷயம். ஆனா நான் நடைபோடறதை கீழ உக்காந்து பிச்சை எடுத்துகிட்டு இருந்த ஜப்பான்காரன் என்னையேவே பாத்துகிட்டு இருந்தான். ஜப்பான்லேயும் பிச்சைக்கரான்கள் இருங்காங்க. நான் நடைபோட்டுகிட்டு இருந்ததுக்கு பக்கத்துலே குச்சிமிட்டாய், பிஸ்கோத்து, சோடா, சிகரெட் விக்கர மெசினு வரிசையா இருந்துச்சு. கீழ உகந்து இருந்த பிச்சைக்காரன் எழுந்து என்முன்னடி வந்து நின்னான். நம்ப ஆறு அடி ரெண்டு இன்ச் உயரம், அவன் ஐந்து அடி தான், அதுனாலே தைரியமா அவனே பார்த்தேன். அவன் ஜப்பான் மொழியிலே எதோ நீளமா பேசினான், நான் அவன் பிச்சைதான் கேக்கறான்னு நினைச்சு, என்கிட்டே சில்லறை (எப்போ இருந்து இருக்கு) இல்லைன்னு என்னோட ரெண்டு கையையும் விரிச்சு காட்டினேன்.  அவன் கையிலே 110 Yen  வச்சான், நான் அந்த yen a  எண்ணி பாத்துட்டு அவன்கிடேயே திரும்ப கொடுத்துட்டு, என்தலைய வேகமா எடமும் வளமும் ஆட்டிட்டு, அந்த எடதே விட்டே ஓடிடேன். நம்ப உருவம் அப்படி இருந்து இருக்கு. 


இருந்தாலும் ஜப்பான் பிச்சைக்காரன் கூட நல்லவனாத்தான் இருக்கான், அப்படின்னு நினைச்சுகிட்டு, பல்ப வாங்கிட்டு வந்துட்டேன்